நீங்கள் மாத சம்பளம் அடிப்படையில் வேலைப்பார்ப்பவரா? ஆம் என்றால் கண்டிப்பாக நீங்கள் இதை படிக்கத்தான் வேண்டும்.
மச்சான் எனக்கு லெட்டர் கொடுத்துட்டாங்க, என்னோட பேரும் ஷார்ட் லிஸ்ட்லே இருக்கு, தலைக்கு மேலே கத்தி தொங்கிக்கிட்டு இருக்கு அது எப்போ விழுமோ தெரியலே.. இப்படி நிறைய புலம்பல்கள் நாள்தோறும், மாசக் கடைசியில் (இப்போவெல்லாம் யாருங்க மாசக்கடைசிலே சம்பளம் கொடுக்கறா) சம்பளம் வருமோ வராதோ, எனக்கு இந்த மாசம் சம்பளம் லேட்டு மச்சான், என்ன செய்றதுனு தெரியலேடா, வாடகை தொல்லை, கரண்ட் பில் தொல்லை (கரண்ட் இல்லாமல் எப்படிங்க பிளாக் படிக்கிறது??), இது பரவா இல்லை எப்படியோ சமாளிச்சிடலாம்.. நமக்காக நம்மளையே நம்பி வூட்டாண்ட எத்தனை ஜீவன்கள் காத்திருக்கு (இதே கரண்ட், ஸ்கூல் பீஸ்.. அங்கேயும் தொடரும்..)
"Last in First out.." இதுதாங்க ரொம்ப மோசமான நிலமை இப்போதைக்கு, என் நண்பன் இப்போதாங்க புது வேலைக்கு மாறினான், மச்சான் இரண்டு மடங்கு சம்பளம், புது டபுள் பெட்ரூம் ஹால் ஃப்லாட் ரொம்பா சந்தோசம்னு சொன்னான், ஒரு மாசம் சம்பளம்கூட வாங்கலே, ஒரே புலம்பல், இப்போ அவனும் வேலை இல்லாமல்... மற்ற கம்பெனிகளுக்கு ஏறி இறங்கியபடி, அப்படியே கிடைத்தாலும் பழைய கம்பெனியில் கிடைத்ததைவிட 40% குறைச்சு சம்மளம் தாறேனு கூப்பிடுறாங்க. இதுதான் இப்போதைக்கு எல்லா கம்பெனிகளும் ஃபாலோ பண்ணும் தாரக மந்திரம்.
வருகின்ற மாதங்களில் உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் வேலை இழப்பார்கள் என்றும் 80,000 கம்பெனிகள் வருமானம் ஈட்டமுடியாமல் மூடப்படும் என்றும் International Labour Organization (ILO) சர்வே நடத்தி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கு. சர்வதேச அளவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 2007ம் ஆண்டு 1.8 கோடியாக இருந்தது 2009ம் ஆண்டு 5 கோடியாக மேலும் அதிகரித்துள்ளது. நிலமை மேலும் மோசமடைந்து வருவதாக ஐ.எல்.ஓ பொது செயலாளர் ஜீவான் சோமாவியா கடந்த வாரம் ஜெனீவாவில் சர்வதேச அளவில் வேலையில்லா வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கையில் குறிப்பிடுகிறார்.
சரி அதெல்லாம் இருக்கட்டும், நாம என்னதான் திறமைசாலியா இருந்தாலும் நாம் வேலைப்பார்க்கிற கம்பெனிக்கு நல்ல பிஸினஸ் மற்றும் வருமானம் வந்தாதானே வேலையும் கொடுத்து சம்பளமும் (முடிந்தால் போனஸ், கமிஸன்) கொடுப்பார்கள். இப்பொவெல்லாம் நிறைய கம்பெனிகள் புது உத்தியை கையாளுகின்றது, அதாவது தாங்களே வேலை விட்டு தூக்கினால் International Labour சட்டப்படி அவருக்கு சேரவேண்டிய கிராஜுவேட்டி, 30 நாள் நோட்டீஸ் பீரியட், எக்ஸட்ரா... கொடுக்கனும். அதுக்கு பதிலா அவர்கள் செய்யும் யுக்தியானது கம்பெனிக்கு தேவைக்கு அதிகப்படியான செலவைக்குறைப்பது, செய்துகொண்டிருக்கும் பிஸினஸை பொருளாதாரம் காரணம் காட்டி நிறுத்துவது, இன்னும் பல.. அப்போ தானாகவே ஊழியர்களுக்கு வேலை இருக்காது, இப்படி எத்தனை நாளைக்குதான் செவ்வனேனு சும்மாவே இருப்பாங்க.. தானாகவே முன்வந்து வேலையை ராஜினாமா செய்துக்கொண்டு போய்விடுவார்கள், இப்படி செய்வதால் ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை கணிசமாக குறைகிறது...
இதே நெருக்கடியினால் வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்கள் பரவலாக தாங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் 100,000 லிருந்து 1 மில்லியன் வரை மாற்றுச்சான்றிதழ் (Transfer Certificate) கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஒரு நம்பத்தகுந்த செய்தி சொல்கிறது.
சரி இப்போதைக்கு வேலையிலிருப்பவர்கள் இருக்கும் வரை எப்படியெல்லம் தாங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.. இதோ.. சில நல்ல தகவல்கள்..
நான் ஒரு வேலைசெய்பவன் (I am an Employee)
* என்னுடைய வேலை நிரந்திரமாக்கபடவேண்டும்
* நான் EMI கட்டவேண்டும்
* என்னை நம்பி எனது குடும்பம் இருக்கிறது
* எனக்காக வேலையை தொடர்ந்து செய்யவேண்டும்
* இனிமேல் சிறுகளகாவது பணம் சேமிக்க வேண்டும்
அப்போ இதையெல்லாம் தீவிரமாக கடைப்பிடியுங்கள்
எதுவெல்லாம் செய்யக்கூடாது
* ரொம்ப நாள் விடுப்பு, வெக்கேஷன்
* சம்பள உயர்வு, ப்ரமோஷன் (உங்களைப்போல் திறமைப்படைத்த குறைந்த சம்பளத்திற்கு ஆள் ரெடியா இருப்பதை மறக்கவேண்டாம்)
* பிறரைப்பற்றி கம்ப்ளெயின் பண்ணுவது, டிரான்ஸ்ஃபர் ஏற்காமல் இருப்பது, சம்பளம் கட் பண்ணால் ஏன் என்று கேட்காமல் இருப்பது
*அதிக வேலை கொடுத்தாலோ, தேவையான போது அலுவலகத்தில் நேரம் செலவழித்து கொடுக்கப்பட்ட அஸ்ஸெயின்மென்ட் முடித்துக்குகொடுக்காமல் இருப்பது *பர்ஸனல் லோன், கிரெடிட் கார்ட் போன்றவற்றை தவிர்ப்பது * முக்கியமாக வேறு வேலைக்கிடைத்தால் மறந்தும் கூட மாறாதிருப்பது
எதுவெல்லாம் செய்ய வேண்டும்
* குறித்த நேரம் அலுவலகத்தில் இருப்பது
*குறித்த நேரத்திற்கு முன்னாடியே கொடுத்த அஸ்ஸெயின்மென்ட் ஒப்படைப்பது
*மேலும் வேலை குறித்த/சம்பந்தமான knowledge Improve பண்ணுவது
* கம்பெனிக்கு உண்மையா செயல்படுவது
* நிறைய ட்ரெயினிங் செல்வது
*குழு அமைத்து செயல்படுத்துவது அதன் மூலம் மற்றவர்களி ஊக்கப்படுத்துவது
* கம்பெனிக்கு வீன் செலவை சேமிப்பது
*எப்பவுமே சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும்.
செலவை குறைப்பது எப்படி?
* ஷாப்பிங் மால் செல்வதை குறைப்பது, நம்ம கை ஓட்டைனு நமக்கே தெரியாது, இருக்கவே இருக்கு கிரெடிட் கார்ட்
*அதிகப்படியாக ரெஸ்ட்டாரண்டில் சாப்பிடுவதை குறைப்பது
* அன்றாடம் தேவையானவற்றை மட்டும் வாங்குவது
*அடிக்கடி வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் போவதை தவிர்ப்பது
* அன்றாடம் கணக்கு வைத்து செலவு செய்வது
இதெல்லாம் இருக்கட்டும், இது ச்சும்மா கொஞ்ச நாளைக்குதான். இதே மாதிரி குழப்பத்திலிருந்து விடுபட இப்போ நம்ம அட்வைஸ் அண்ணாத்தே டிஸ்கி வந்து என்ன சொல்றாருனு கேட்போம்..
* குடும்பத்துடன் மற்றும் குழந்தைகளிடனும் அதிகநேரம் செலவு செய்யவேண்டும்
* காலார நடந்து எக்ஸசைஸ் செய்யனும்
* மனதுக்கு இதமான இசை கேட்கவேனும்
* நண்பர்களுடனும், உறவினர்களுடனும் நேரம் செலவு செய்யனும்
*அதிகமான பொது சேவையில் கவனத்தை செலுத்தவேணும்.
பி.கு.: இதையெல்லாம் கடைப்பித்தும் தாங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், அதைதாங்க விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க..