என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

மல்டி மில்லியனராக‌ வேண்டுமா..???

அவசரமான இந்த உலகத்துலே எல்லோரும் பணத்தை தேடி அலைந்துக்கொண்டிருக்கோம், பணம்தான் வாழ்க்கைக்கு இன்றியமயாததாகிவிட்டது என்ப்பது யாவரும் அரிந்தது, அப்படி இருக்கயில் சாதாரணமாக 500க்கும் 1000க்கும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் நம் மக்களை மில்லியனுக்கும் பில்லியனுக்கும் அதிபதியாக மாற்றுகிறேன் வாருங்கள் என்றால் யார்தான் காதுகொடுத்து கேட்க மாட்டார்கள், நானும் அதையே அழைக்கிறேன் இந்த பதிவின் மூலம் உங்களையும் மல்டி பில்லியனர்களாக பார்க்க எனக்கும் ஆசைதான்.

இப்போதெல்லாம் பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொள்வதற்கு பதில் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் வைத்துக்கொண்டு ரொம்ப சிம்பிளாக ஷாப்பிங்க் செய்யும் காலம் வந்துவிட்டது, அதற்கும் ஒருபடி மேல்போய் ஆன்லைன் ஷாப்பிங்க் அதிகம நம்மூரில் அதிக‌ம் புல‌க்க‌த்தில் வ‌ந்துவிட்ட‌து. அப்ப‌டி இருக்க‌யில் இங்கெ பாருங்க‌ளேன் ப‌ண‌த்தை க‌ட்டு க‌ட்டாக‌ தூக்கினுப்போய் ஷாப்பிங்க் ப‌ண்ணுறாங்க‌, எங்கேனு கேக்குறீங்க‌ளா ஜிம்பாப்வே நாட்டில்தான்.

இவரு பேங்குலே வேலைப்பாக்கலேங்க.. மாசம் முதல் வாரத்துலே உணவுக்கு தேவையான சாமான்கள் வாங்க சூப்பர்மார்க்கெட் போகிறாராம்
 


பார்ட்டி கொடுத்துட்டு பில் செட்டில் பண்ண போறாருங்க, இப்போ நெனச்சிருப்பாரு ஏன்டா பார்ட்டிக்கொடுத்தோம்னு

அவரு பார்ட்டிவெச்சு செலவு பண்ணதுக்கு கட்டவேண்டிய பில்(ரஷீது)

 

100$ பில்லியன் நோட்டு இது, அட இப்போ $100 ட்ரில்லியன் நோட்டு வெளியிடப்போறாங்களாம்

 

3 முட்டையோட விலை 100$ பில்லியன் தான்

 
ஷோ ரூம்லே ஒரு கால்சட்டை(PANT) க்கு விலை என்னா என்று TAG வைத்திருக்கிறார்கள்

 

பள்ளிக்குழந்தைக்கு கொடுக்கும் பாக்கெட் பணமாம்


 






 

 

 

 

 

 

பள்ளிக்கு போகும்போது புத்தக மூட்டையை சுமக்கிறோம், பள்ளிவிட்டு வந்தவுடன் கடைக்கு சாமான் வாங்க சொல்லி இப்படி பணமூட்டைய தாராங்க.. எங்களுக்கு ஒரு விடிவே இல்லியா..?

















$1 ட்ரில்லியன் ஜிம்பாப்வே நோட்டு $33 USD க்கு சமமாம்

முக்கியமான விசயம் என்னான்னா 1980 ம் ஆண்டுகளில் $1 ZMD  1 இங்லாந்து பவுண்ட்டுக்கு சமமாம். இப்போ..???

எல்லாம் "அவங்க" தான் இந்த உலகத்தையே கட்டியாளனும்னு கங்கணங்கட்டிக்கினு இருக்குறதுனாலே வார வினைக

விதை விதைத்தவன் ஒரு நாள் வினையருப்பான்...

என் குட்டி தேவதை..!



என்னுள்ளே கலந்தாய்
ஓருரிய் ஆனாய்
ஒரு உயிரை சும‌ந்தாய்
விரும்பி உணவுண்டாய்
இன்னுமொரு உயிர் உயிர்வாழ

ஈரைந்து மாத‌ங்க‌ள் சும‌ந்தாய்
சிர‌த்தைக‌ளையும்
சிறு ர‌ண‌ங்க‌ளையும் தாங்கினாய்

வ‌லியின் உண‌ர்வுக‌ள் புரிந்து
நானும் அனுப‌விக்க‌
ஓடோடி பறந்து வ‌ந்தேன்
என் அருகாமையால்
உன் உண‌ர்வுக‌ளையும் ப‌கிர்ந்துண்டேன்

ஜீன் 17 எங்க‌ள் வாழ்க்கையில்
ம‌ற்றுமொரு புது வசந்தம் வீசியது

ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ள்
தன் வேலைகள் அனைத்தையும்
தள்ளிவைத்துவிட்டு
காத்திருந்து
மலர்தூவ‌
அழ‌கான குட்டி தேவ‌தை பிற‌ந்தாள்

இவ‌ள் வர‌வால்
அன்று இர‌வு நில‌வைக்கூட‌ காண‌முடிய‌வில்லை
ந‌ட்ச‌த்திர‌ங்கள் கூட‌
ஓடி ஒழிந்த‌ன
இனி ந‌ம‌க்கு வேலையில்லையென்று

சிரமங்களை குறைத்து
சீரான பிரசவத்தை கொடுத்த‌
அந்த இறைவனுக்கு எல்லா புகழும் நன்றிகளும் உரித்தாகட்டும்..!!

டிஸ்கி: ஜூன் 17ம் தேதி புதன் மதியம் 2.15(இந்திய நேரம்)மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை பதிவு போட்டு வாழ்த்து தெரிவித்த நண்பர் அ.மு.செய்யதுக்கும் அந்த பதிவில் பின்னூட்டம் மூலம் வாழ்த்திய அனைவருக்கும், தொலைப்பேசி, மின்னஞ்சல் மூலம் வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள் பல.

நட்பின் இலக்கணம் - எழுத்தோசை..!

இன்று எனக்கு பிறந்தநாளாம்.. !

பொதுவாகவே ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஒரு வருஷம் கடந்துவிட்டதே என்றும் இந்த வருடத்தில் என்னத்த‌ சாதிச்சோம் என்று நொந்துக்கொண்டவனாகவே ஒவ்வொரு வருடமும் அந்நாள் (8‍ஜூன்) கழியும். சிறுவயது முதலே இதை கொண்டாட வேண்டும் என்று என் பெற்றோர்கள் போதிக்கவில்லை. சிறு வயது நண்பர்களும் அப்படியே கல்லூரி காலத்தில்கூட வெற்று நாடகமாட வேண்டியிருந்தது அதுவும் நண்பர்களின் ட்ரீட் க்காக. (ட்ரீட்க்கு ஏதாவது காரணம் வேண்டுமல்லவா). இப்போவெல்லாம் என்னுடைய பிறந்தநாளை என்வீட்டு தங்கமணிதான் ஞாபகப்படுத்துவார்கள் மற்றும் நண்பர்கள் SMS அ தொலைப்பேசி மூலம். நேற்றும் இவ்வாறுதான் ஞாபகப்படுத்தப்பட்டு அதே மேற்சொன்ன காரணத்தினால் வருத்ததோடு கழிந்த இரவின் இருட்டில் இன்று பிரகாசமாய் ஒரு வாழ்த்துக்கவிதை தமிழரசி அவர்களின் தளத்தில் அனைவரும் வாருங்கள் அபுவை வாழ்த்தலாம் பார்க்கவும். இப்படியெல்லாம் எழுதி என்னை வாழ்த்தியது மட்டுமின்றி அனைவரையும் வாழ்த்துவதற்காக அழைத்து பதிவிட்ட இவர்களை என்னா செய்வது, நன்றி என்ற வாழ்த்தை தவிர வேறு தெரியவில்லை...

சிலந்தியாய்
வலையுலகத்தில் வலைப்பின்னிய நீ
அதில் மாட்டிய பூச்சியாய்
இந்த நட்பு என்னும் பாசத்திலிருந்து
வெளிவரமுடியாமல் தவிக்கும் நண்பன்!

இன்று புதிதாய் பிறந்த‌
சந்தோஷத்தை கொடுத்த‌ ந‌ட்பின் இல‌க்க‌ணமே!
மற்றும்
என்னை வாழ்த்திய
அனைத்து நல் உள்ளங்களுக்கும்
நன்றிக‌ள் கோடி

வாழிய‌ உம‌து தொண்டு..!!

திருடப்பட்ட பதிவுகள்..!

கடந்த சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்..
கடந்த மே மாதம் நான் எழுதிய 4 இடுக்கைகள்(பதிவுகள்) காணாமல் போய்விட்டது, அதனோட லின்க் கிளிக் செய்தால் "Page Cannot be Found" என்று வருகிறது, உடனே என் வலைப்பக்கம் சென்று பார்த்தால் மே 25 க்கு பிறகு பதிவிட்ட என்னுடைய "போட்டிகள்" மட்டுமே இருக்கிறது மற்ற பதிவுகளை (குறிப்பாக "கில்லி") காணவில்லை, அதை நான் முன்னரே லக்கிலுக் அறிமுகப்படுத்திய சிறுகதை போட்டிக்கு அனுப்பியிருந்தேன். இதனால் என்னுடைய சந்தேகம் வலுக்கிறது அதாவது அதை யாரோ திருடிவிட்டு அது எடுக்கப்பட்ட சுவடு தெரியாமல் அழித்துவிட்டார்கள் என்று.

வலைத்தளம் முழுதும் திருடப்படுவது போய் இப்போதெல்லம் முக்கியமான பதிவுகள் மட்டும் திருடப்படுகிறது. இதை தடுக்க ஆளேயில்லியா..?

பதிவுகள் போனது மட்டுமின்றி பின்னூட்டங்களும் சேர்ந்து போனதுதான் வருத்தம் தரக்கூடிய விஷயம்.

அன்பார்ந்த நண்பர்களே/தோழிகளே உங்களுக்கு அதை எப்படி Retrieve பண்ணுவது என்றும் இனிமேல் மற்ற பதிவுகளை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்றும் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், மற்ற நண்பர்கள் அதை ஃபாலோ பண்ணி இந்த செயல்களிலேர்ந்து தன் பதிவுகளை தற்காத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

மீள் பதிவு போடலாம்.. இருந்தாலும் இழந்ததை திரும்ப பெற்றால் மகிழ்ச்சியே..!

ஒரு எச்சரிக்கைக்காகவே இந்த பதிவு....

டைட்டானிக் - II

டைட்டானிக் என்று ஒரு கப்பல் 1912 காலகட்டத்துலே கடலிலே மூழ்கியதாக வரலாற்று உண்மை, அதற்கான ஆதாரம் கண்டுபிடித்து அது எப்படி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது, என்னென்ன கேளிக்கைகள், காமெடிகள், பணக்காரர்/ஏழை என்ற வித்தியாசம் அதனோடு காதல்...... அதை சொன்ன விதம், அதை முறியடிக்க கையாளப்பட்ட விதம் இறுதியில் அது எப்படி கடலில் மூழ்கியது என்ற காவியத்தை சினிமா படமாக வெளிவந்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளைக்கொண்டது, அந்த கப்பல் உருவான விதம் அதற்கான மொத்த செலவு எல்லாம் கணக்கிலடங்கா. இதைப்பற்றி வேத்தியன் டைட்டானிக் பயணத்தின் போது உயிர்தப்பித்த கொஞ்ச சிலரில் கடைசியாக ஒருவர் இன்று உயிர்யிழந்தார் என்ற செய்தியை பதிவாக போட்டுள்ளார் அதை படிக்க இங்கே   பாவம் அவருக்கு இந்த புது டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய பாக்கியம் இல்லை (ஒரு டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து உயிர் தப்பித்ததே போதும் என்று இருந்திருக்கலாம்)

இப்போது உலகின் மிகப்பெரிய டைட்டானிக்-II என்ற கப்பலை வடிவமைத்து பயணக்கப்பலாக இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதை இங்கே காணலாம்

image016

எம்மாம்பெருசு..

image003 பார்க்கவே நல்லாயிருக்குலே, மொட்டமாடிலேர்ந்து படம் புடிச்சதாம்image018 அட இங்கேதான் முழு கன்ரோலும் இருக்கா.. இந்தப்பக்கம் எந்த காதல் ஜோடிகளும் சும்மனாச்சிகுமாவது வந்துடாதீங்கப்பா, அப்புறம் டைட்டானிக் பாகம் 75 வருசம் கழிச்சி சினிமா எடுத்துடப்போறாங்க‌

image017 கிரவுண்ட்லே விளையாட மாட்டாங்க, இங்கே பந்தாவுக்கு விளையாடுவாங்க‌

 image015

7 ஸ்டார் ஹோட்டல் மாதிரி உள் கட்டமைப்பு நல்லாயிருக்குலே

image014

ஏர்போர்ட் மாதிரி இங்கேயும் சப் கன்ட்ரோல் தளம் இருக்காம்

 image013 சாப்பாட்டை பார்த்தவுடன் ரொம்ப பசிக்குமே

image012 மேடை கச்சேரி வேறா.. இது இல்லாமல் மக்களுக்கு இருக்கமுடியாதுலே..

image011 அட கப்பலுக்குள்ளே பூங்கா வேறயா.. குழந்தைகளுக்கு குதூகலம்தான்

image010 image009 நீச்சல் குளம் மேல்தட்டும் கீழ் தட்டும்

image008 இது இன்னாப்பா ஷாப்பிங்க் காம்ளெக்ஸா.. இம்மாம்பெரீசாக்கிது, இதுலேயும் ஒருத்தர் புத்தகப்புளுவா இருக்கார்

image007 இயற்கையை ரசிக்க ஒரு இடம்

image006 image005 வாக்கிங் போறதுக்கும், கில்லி விளையாடுவதற்கு இதை பயன்படுத்தலாமாம்

image004

இது இன்னாப்பா கடலின் நடுவே ஒரு கடற்கரை...

நல்லா ரசிச்சீங்களா

ஓட்டைப்போட்டுவிட்டு போங்கப்பா அதோடு பின்னூட்டமும் மறக்காம‌


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே