என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

பெண்களின் சதவிகிதம் குறைவு?

சென்ற மாதம் ராஜஸ்தானில் ஒரு பெண்ணை ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரர்கள் திருமணம் செய்துக்கொண்டார்கள் என்ற அதிர்ச்சிகரமான நம்பத்தகுந்த செய்தி. அதுக்கு அவர்கள் சொல்லும் காரணம் பெண்கள் குறைவாக இருப்பதாகவும், பெண் கிடைப்பதில் (அது எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும்) மிகுந்த சிரமமாக இருப்பதாகவும் சொன்னார்கள். இந்த நிலை தமிழகத்திலும் உருவாக வாய்ப்பிறுக்கிறது என்பதுதான் வேதனை

இது பற்றி எஸ்.ஐ.ஆர்.டி (SIRD – State Institute of Rural Development) என்ற ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு தீவிர விசாரனையில் இறங்கியது, அது வெளியிடும் ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது அதன்படி, தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 1000 ஆண்களுக்கு நிகராக 952 பெண்களே இருக்கிறார்கள், 1969 ல் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும் (அதற்காகதான் முன்னோர்கள் 1 க்கும் மேற்பட்ட கல்யாணம் செய்துக்கொண்டார்களோ?) இந்த் கணக்கீடு வரும் ஆண்டுக‌ளில் பெண்க‌ளின் எண்ணிக்கை மேலும் குறைந்து 469 ஆகும் என்ற‌ அதிர்ச்சிக‌ர‌மான‌ த‌க‌வ‌லை வெளியிட்டுள்ள‌து.

இத‌ற்கு அவ‌ர்க‌ள் கூறும் கார‌ண‌ங்க‌ள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா/பெண்ணா என்று தெரிந்துக்கொண்டு அந்த உயிரை கருப்பையிலேயே வைத்து அழித்துவிடுவது, இன்று குழந்தையின் வளர்ச்சியை பற்றி தெரிந்து அதற்கு தகுந்தார்போல மருந்துவகைகள் கொடுத்து ஆரோக்யமான பிரசவத்திற்கு வழிவகை செய்யும் தற்போதைய ஸ்கேன் செய்யும் முறை இன்று ஸ்கேன் செய்தவுடன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா/பெண்ணா என்று சொல்லப்படுகிறது, அதை வைத்து பெண் என்றால் மேற் சொன்ன முறையின் மூலம் கரு அழிக்கப்படுகிறது. ஸ்கேன் வசதி இல்லாத காலத்தில் குழந்தை பிறந்தவுடன் அது பெண்ணாக இருந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவிடுவார்கள்

எஸ்.ஐ.ஆர்.டி என்ற தன்னார்வத்தொண்டின் தொண்டர்கள் நிறைய அடித்தட்டு கிராமங்களுக்கு சென்று களப்பணி செய்து நிறைய மக்களுக்கு பெண்குழந்தைகளின் மகத்துவத்தை பற்றி எடுத்துச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், இதன் மூலம் ஓரளவேனும் இந்த பெண் சிசு கொலை குறைய வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வரிக்கை சொல்லுகிறது.

100% கருத்தரித்தலின் போது 45% ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதால் (அ) ஒரு குழந்தை பிறந்து 2 மாதத்தில் மறு கருத்தரிப்பு (அ) பொருளாதார, வேலை சூழ்நிலையால் குழந்தை பிறப்பு தள்ளிவைப்பு இந்த காரணங்களால் கருக்கலைப்பு செய்யப்படுகிறது, 12% பெண் குழந்தை என்று தெரிந்து க‌ரு கொலை செய்ய‌ப்ப‌டுகிற‌து, மீதி 43% விரும்பி குழ‌ந்தை பெற்றுக்கொள்ள‌ப்ப‌டுகிற‌து. தற்போது அரசின் கடுமையான தண்டனை சட்டத்திற்கு பிறகு இரண்டு வெவ்வேறு உறுதிமொழி பத்திரங்களில் என்ன குழந்தை என்று சொல்லமாட்டோம் என்று மருத்துவரும், என்ன குழந்தையானாலும் ஆரோக்யமா இருந்தால் சரி அது என்ன குழந்தை என்று மருத்துவரை நச்சரித்து கேட்க மாட்டோம் என்று பெற்றோரும் கையெழுத்திட்ட பிறகே கர்பினிப்பெண் ஸ்கேன் செய்ய அனுமதிக்கப்படுகிறாள்.

ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 15% பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதால் அந்த 15% எப்பவும் வெற்றிடமாகவே இருக்கிறது, இந்த கணக்கீடு பிற்காலத்தில் பற்றாக்குறை 1000 க்கு 952 என்று நிற்கிறது. பெண் சிசு கொலைக்கு சொல்லப்படும் முதல் காரணம் வறுமை, வரதட்சணை. இந்த இரண்டு "வ" க்கும் ஆண் பிள்ளைக்கு சாதகமானதே அதனாலே ஆண் குழந்தை என்றாலே போற்றி பெருமிதம் கொள்கிறார்கள், இளைஞர்கள் வரதட்சணை வாங்கமாட்டோம் என்ற உறுதிமொழியில் உறுதிப்பட இருக்கவேண்டும்.

இந்த இடத்தில் நான் ஒன்றை மிகப்பெருமையா சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், என்னுடை நண்பர்கள் சேர்ந்து எடுத்த முடிவான வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி செய்து அதன் படி நடத்தியும் காட்டிருக்கிறோம்.

வளைகுடா நாடுகளில் பெண் குழந்தை என்றால் (அது எந்த நாட்டின் குழ‌ந்தைக‌ளாக‌ இருந்தாலும்) வாரி அணைத்து கொஞ்சி ம‌கிழ்வார்க‌ள், இந்த‌ நில‌மை ந‌ம்நாட்டிலும் வ‌ர‌வேண்டும், பெண் என்ற‌ பொக்கிஷம் பாதுகாத்து போற்றப்படவேண்டும்!

டிஸ்கி: இது என்னுடைய 50வது பதிவு, இதன் மூலம் சமூக அவலத்தை வெளிச்சம்போட்டுக்காட்டுவதில் பெருமையடைகிறேன்.


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே