என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

பாசக்கார புள்ளைக(ஹ)...!

நான் பதிவெழுத வந்து இன்னும் ஒரு வருடம் கூட முழுதாகலே, அலுவலக ஆணிகளின் அட்டகாசத்தால் பதிவுலகத்தை விட்டே சென்றுவிடலாமென்று சில சமயம் தோண்றும், என்னை பதிவெழுத சொல்லி சிங்கைக்கு வரவழைத்து வற்புறுத்திய‌ என் நண்பன் நட்புடன் ஜமாலை நினைத்தால் ஆத்திரமாக வரும், ஏன்டா இப்படி என்னை மாட்டிவிட்டேனு அடிக்கடி நொந்துக்குவேன். இதை ஒரு வகையான போதை என்றே எண்ணுவேன். இதனால் நிறைய அலுவலக வேலைகளில் கவனக்குறைவுக்கும் ஒரு காரணம். கடந்த 2 மாத காலமாக என் வலைத்தளம் கேட்பாரற்று கவனிக்க ஆளின்றி கிடக்கிறது, என் கடைக்கு வருபவர்கள் கடையில் பழைய ஸ்டாக் இருக்கு என்று வெறுத்துப்போய் திரும்புவர்கள் ஏராளம். இருந்தாலும் என் அன்பர்களின் வலைத்தளங்களுக்கு போவதையும், படித்து கமெண்டிடுவதையும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, கிடைக்குற கேப்புலே லாரி ஓட்டிக்கிட்டு இருக்கிறேன். என் கடையில் பழைய ஸ்டாக் இருந்தும் நிரந்தர கஸ்டமர்களாக என் அன்பர்கள் 100 பேர் இருக்கிறார்கள் (100 லோவர்கள்), இந்த பாசக்கார மக்களுக்காக மீண்டும் ஏதாவது (இது வரை என்னத்த எழுதி கிழித்தேனு கேக்குறது வெளங்குது) எழுதலாமென்று இருக்கிறேன்.

பதிவெழுத வந்த காலத்தில் நான் மட்டும்தான் துபாயில் வலைத்தளம் வைத்திருக்கிறோம் என்று நானே பெருமைப்பட்ட காலம் உண்டு நானும் நிறைய பதிவுகளுக்கு சென்று லோவர் ஆகி தொடர்ந்து படிக்கும்வரை, இப்போ நினைத்தாலும் சிரிப்பு சிரிப்பா வருது.....:)))

அமீரகத்தில் இவ்வளவு பதிவர்கள் அதுவும் அண்ணாச்சி (இப்போதான் பதிவுலகத்துக்கு வந்து 5வது வருட விழா எடுத்தாங்க), குசும்பன் போன்ற பிரபல பதிவர்களை சந்தித்த பின் நான் வெறும் வெறும் பந்தாபார்ட்டினு தெரிஞ்சிக்கிட்டு அடக்கிவாசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

அண்ணாச்சி நைஜீரியா சிங்கம் ராகவ் தன் குடும்ப சகாக்களுடன் துபாய் வந்திருந்தப்போது நான் ஒரு வாரம் ஊர் போய்விட்டு வந்த அன்று இரவு அவரை பார்க்கப்போய்ருந்த போதுதான் மற்ற அமீரகப்பதிவர்களின் ஒரு சிலர் அறிமுகம் ஏற்பட்டது, அதிலிருந்து பிரமாண்ட கூட்டத்திற்கு செல்லமுடியாமல், குறும்(பு) படம் வெளியாக காரணமாக இருந்த சுற்றுளாவுக்கு குடும்பத்துடன் இருந்ததாலும் போக முடியாமல் இருந்ததால்.. ராஸாண்ணாவோட அன்புத்தொல்லையால் கடந்த வெள்ளியன்று படம் ரிலீஸ் (ட்ரைலர் பார்த்து மிரண்டேன்) அன்னிக்கு கட்டாயம் போயாகவேண்டும் என்று சொல்லி குடும்பம் சகிதமாக வருவதாக வாக்கு கொடுத்திருந்தேன். திடீர் விருந்தாளிகளின் (அட நம்புங்கப்பா என் வாப்பா காலத்திலிருந்தே விருந்தாளிகளை நெஞ்சில் தாங்குவேன்) வரவால் நான் மட்டும் போவதாக பிளான் பண்ணி அவர்களுடன் மதிய உணவை (என்னிக்குமே வெள்ளி மதிய உணவை தங்கமணி கையாலே சாப்பிட்டு பழக்கம்) முடித்துவிட்டு டிரெஸ் மாற்றியதை கண்டு என் மகனின் அடத்தால் அவரையும் உடன் கூட்டிக்கினு கிளம்பினேன். அண்ணாச்சி சத்திரம் என்று சொல்லிருந்ததால் லொகேஷன் தெரியாமல் என்கிட்டே உள்ள சொச்ச பிளாக்கர்ஸ் ஃபோனில் அழைத்தாலும் எடுக்கவில்லை, அங்கே கண்ட கலீஜ் டைம்ஸ் பேப்பர் விற்பவரிடம் சத்திரம் எவடடுண்டு நு மலையாளத்தில் சம்சாரிச்சால் எனக்கு சத்திரம் அறியாது பத்திரம் மாத்திரம் அறியும் நு சொல்லியதை கேட்டு என் மகன் கூட சிரித்துவிட்டார்.

ஒரு வழியா குசும்பனை ஃபோனில் பிடித்து அண்ணாச்சி வீட்டை அடைந்தால் அவரோட ஃபிளாட்டைதான் சத்திரம் என்று சொல்லிருக்கிறார், நான் கூட இந்த விழாவுக்காக ஒரு சத்திரத்தை வாடகைக்கு பிடித்துவிட்டார்கள் என்று நினைத்தேன். தன் ஃபிளாட்டை பதிவுலகத்திற்காக சத்திரமாக்கிய அண்ணாச்சியை இங்கே நினைவு கூறுகிறேன்.

இப்போ எதற்கு இத்தனி கதை என்று கேட்பது தெரிகிறது. இந்த பதிவர்களின் சந்திப்பின் மூலம் நாம் ஏன் இந்த உலகத்தை விட்டு விலக வேண்டும், சமயம் கிடைக்கும்போது ஏதாவது கிறுக்கினால் என்ன என்று அங்கு அனைத்து பதிவர்களை சந்தித்தபின் ஒரு முடிவு எடுத்தேன்.


தாய்நாட்டை விட்டு வந்து மற்ற மொழிகளுடன் உறவாடி, அளவாவி நம் தாய்மொழியின் மடியில் தவழ்வதுபோல்..பிரபல எழுத்தர் இலங்கை தமிழ் வாழ் மக்களின் வாப்பா என்று அழைக்கப்படும் திரு. ஜின்னா ஷர்புதீன் அவர்களை கண்டதில் சந்தோஷம், அவர் சொன்னது போல் மதங்களையும் தாண்டி மொழி நம் அனைவரையும் இங்கே ஒன்று சேர்த்திருக்கிறது. சில மொக்கைகளையும், அரட்டைகளையும் தாண்டி அங்கே இலக்கியமும், வெண்பாவும் பேசியதை கேட்டதில் ஆச்சரியம், வியப்பு.. விடைபெரும்போது மனதில் புது வித புத்துணர்ச்சி பரவவைத்த என் நண்பன் ஜமாலுக்கு நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே