சட்ட சபையிலோ, நாடாளுமன்றத்திலோ நாட்டுமக்களின் நலன் கருதி கூடி நல்ல முடிவெடுக்கும் கூட்டத்தொடரில் எத்தனையோ காமெடிகளும், சொற்போரும், தீர்மானங்களும், வெளிநடப்புகளும் நடந்திருக்கிறது, இருந்த போதும் இதனூடே சிறப்பாக நடந்தேறிய வரலாற்று சிறப்புமிக்க சண்டகளை நாம் என்றுமே மறந்திடமுடியாது. அவ்வகையான நிகழ்வுகள் இன்றும் நம் தலைவர்கள் ஊறுகாயாகவும், சைடிஸாகவும் அவ்வப்போது (கூட்டணிகள் மாறும்போது இது அதிகம் இருக்கும்) அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை ஞாபகப்படுத்தாமல் இருந்ததில்லை.
குறிப்பாக தமிழ்நாட்டு சட்டசபையில் மைக்கை பிடிங்கியும், நாற்காலியை தூக்கியும் ஒருத்தரை ஒருத்தர் தாக்குவதும் இதற்கு ஒரு படி மேல் போய் சேலையை உருவியது, வேஷ்டிடைய அவிழ்த்துவிட்டதையும் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறுக்கமுடியாத ஒன்று. இது இந்தியாவில் மட்டும்தான் சாத்தியமா என்ற கேள்விக்கு இங்கே தெளிவான விளக்கம்
உலகம் முழுதும் எல்லா நாடுகளிலும் பரவலாக நடந்தேறியவன்னம் உள்ளது, இதில் அதிகமாக வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவதில்லை. அதையும் மீறி ஒரு சில மீடியாக்களின் உதவியுடன் உங்கள் பார்வைக்கு இங்கே....
இது உக்ரைன்.. கழுத்தை நெறிக்கிறாங்க
உக்ரைன் நாட்டின் காட்சி
தென் கொரியா
வட கொரியா அவங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக
இது சோமாலியா... சாப்பிடவே வழியில்லே இப்புடி எல்லா நாற்காலியை ஒடச்சிட்டா அப்புறம் தரை டிக்கெட்தான்
இது தைவான்...
இதுவும் தைவான்..... சூ பறக்குறது படு ஃபேமஸ்
இதுவும் தென் கொரியாதான்... தண்ணீர் வண்டியே உள்ளேயே அனுமதிச்சாச்சு தொல்லை தாங்காமல்
இது ரஷ்யா...