இதெல்லாம் சரி, மொழியால் ஒன்றினைந்த நம் தாய் மொழியாம் தமிழுக்குஇந்திய அரசாங்கத்தால் அங்கீகாரம் கிடைத்ததா என்பது ஒருகேள்விக்குறியாகவே இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில்வெளிநாடுகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவது ஒரு புறம் இருக்கிறது (இந்தியாவுலேயே அதுவும் தமிழ்நாட்டுலேயே இது நடக்குதுனு சொல்றதுகாதுலே விழுது..)
தன் குழந்தைக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எடுப்பதற்கு தாய்/தந்தை இருவரும் தத்தமதுகடவுச்சீட்டுடன் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குசென்று தேவையான கோப்புகளை பூர்த்திசெய்து கொடுத்தால் அது சரி பார்க்கப்பட்டுகுறைந்தது 10 நாட்களின் கடவுச்சீட்டு வீடுவந்து சேரும். இதே தந்தை வெளிநாட்டில்வேலை நிமித்தகாக தங்கிருக்க நேர்ந்தால்..?
ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தூதரகம் உண்டு, குழந்தையின் முதன்மை (ஒரிஜினல்) பிறப்புச்சான்றிதளையும் தன் முதன்மை கடவுச்சீட்டையும்கொடுத்தால் கோப்புகள் சரிபார்க்கப்பட்டு Affidavity என்ற ஒரு forum கிடைக்கும், அதை அந்த குழந்தையின் தாய் தன் கடவுச்சீட்டுடன் பாஸ்போர்ட்அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றால் அந்த குழந்தைக்கு கடவுச்சீட்டு கிடைக்கும். அந்த Affidavity Forum அந்த இடத்தில் தந்தை ஸ்தானத்தில் செய்லபடுகிறது, அது அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்பதற்கு அடையாளம்.
சரி இப்போ விசயத்துக்கு வருவோம்... என் நண்பர் அவரின் மகளுக்கு கடவுச்சீட்டுபெறுவதற்காக ஊரிலேர்ந்து குழந்தையின் பிறப்பு சான்றிதள் வரவழைத்துமிகுந்த வேலைப்பளுக்கிடையே துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றுஇருக்கிறார்.
சென்ற வேகத்துலேயே எந்த வேலையும் ஆகாமல் திரும்பவந்துவிட்டார். காரணம் கேட்டதற்கு அந்த பிறப்புச்சான்றிதழ் முழு முதற்கொண்டு தேவையானவிபரங்கள் பூர்த்தி செய்தது செம்மொழியாம் தமிழிலேயே இருக்கிறதாம். அவ்வாறு இருந்தால் அதற்கான அஃபிடவிட்டி தரமாட்டாங்களாம்.
ஆங்கிலம்
அராபிக்
ஹிந்தி
மலையாளம்
மேற் குறிப்பிட்ட மொழிகளில் அல்லாது வேறு மொழியில் இருந்தால்ஒத்துக்கொள்ளப்ப்டமாட்டாதாம். இவ்வாறு நண்பர் கூறி ஆதங்கப்பட்டார்.
மற்ற மூன்றையும் விட்டுவிடுவோம், மலையாளம் செம்மொழியாய்அங்கீகரிக்கப்பட்ட மொழியா? இந்திய தூதரகம் என்பதற்கு பதில் கேரள தூதரகம்என்று அழைக்கும் அளவிற்கு மலையாளீகளின் ஆக்கிரமிப்பு இருக்கிறது என்பதுஉண்மை. பாஸ்போர்ட் அலுவலகம் தமிழ்நாட்டுலேதானே இருக்கிறது, தமிழ்நாட்டில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு தமிழில் தறும் சான்றிதள்புறக்கணிப்படுமா? இங்கு வேலை செய்பவர்களுக்கு தமிழ் தெரியும்தானே. தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய தூதரகத்துக்கு அரசாங்கம்உத்தரவிடவில்லையா. இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் இரண்டுமாதங்களுக்கு முன்னர்தான் தமிழில் பிறப்புச்சான்றிதழ் இருந்தால்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற இயற்றப்படாத சட்டம் அமுலாகிருக்கிறது. அதுவும் இரண்டு மாதம்கூட ஆகவில்லை செம்மொழி மாநாடு நடந்து.
என்னாலே இப்படி எழுததான் முடிகிறது, சிலது சரியாக நடவடிக்கை எடுக்கலாம், சிலது தனது ஆதங்கத்தை சொல்லலாம். இந்த பதிவு சரியான நபர்களிடம் சேர்ந்து அதற்கான தீர்வு கிடைத்தால் ஒட்டுமொத்த தமிழனுக்கும் பெருமை. நடக்குமா..???