ஆறேலு பட்டாம்பூச்சிகள்
எட்டிப்பிடித்து விளையாட சிறிதாக சில மலர்கள்
என் வளர்ச்சியை காண இரு விழிகள்
சிற்சில மகிழ்ச்சி குதூகலமிக்க உணர்வலைகள்
இது போதும் இப்போதைக்கு என்னுலகிற்கு...
இந்த சுகங்களை கடந்து,
வர மறுக்கிறேன்
இரைச்சலான வெளி உலகிற்கு..
ஆனாலும்....
விரைவில் வெளிவர விரும்புகிறேன்
உருக்கொடுத்த பெற்றோரின் அரவணைப்பிலும்
படைத்த இறைவனின் கட்டளைக்கிணங்கி
புதியதோர் உலகு செய்ய.....