என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

செம்மொழியான தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்ததா?

செம்மொழியான தமிழ் மொழியே!!! இது சமீப காலமாக நாம் அனைவரும்முனுமுனுத்த வார்த்தை, அதையும் தாண்டி .ஆர். ரகுமானி இசையினூடேபாடலாகவும் முனுமுனுக்க வைத்தது, வைத்துக்கொண்டிருக்கிறது. 400 கோடிரூபாய் செலவு செய்து 5 நாட்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த தமிழ்நாட்டுஅரசுக்கு ஒரு சபாஷ்..!

இதெல்லாம் சரி, மொழியால் ஒன்றினைந்த நம் தாய் மொழியாம் தமிழுக்குஇந்திய அரசாங்கத்தால் அங்கீகாரம் கிடைத்ததா என்பது ஒருகேள்விக்குறியாகவே இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில்வெளிநாடுகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவது ஒரு புறம் இருக்கிறது (இந்தியாவுலேயே அதுவும் தமிழ்நாட்டுலேயே இது நடக்குதுனு சொல்றதுகாதுலே விழுது..)


தன் குழந்தைக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எடுப்பதற்கு தாய்/தந்தை இருவரும் தத்தமதுகடவுச்சீட்டுடன் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குசென்று தேவையான கோப்புகளை பூர்த்திசெய்து கொடுத்தால் அது சரி பார்க்கப்பட்டுகுறைந்தது 10 நாட்களின் கடவுச்சீட்டு வீடுவந்து சேரும். இதே தந்தை வெளிநாட்டில்வேலை நிமித்தகாக தங்கிருக்க நேர்ந்தால்..?

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தூதரகம் உண்டு, குழந்தையின் முதன்மை (ஒரிஜினல்) பிறப்புச்சான்றிதளையும் தன் முதன்மை கடவுச்சீட்டையும்கொடுத்தால் கோப்புகள் சரிபார்க்கப்பட்டு Affidavity என்ற ஒரு forum கிடைக்கும், அதை அந்த குழந்தையின் தாய் தன் கடவுச்சீட்டுடன் பாஸ்போர்ட்அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றால் அந்த குழந்தைக்கு கடவுச்சீட்டு கிடைக்கும். அந்த Affidavity Forum அந்த இடத்தில் தந்தை ஸ்தானத்தில் செய்லபடுகிறது, அது அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்பதற்கு அடையாளம்.

சரி இப்போ விசயத்துக்கு வருவோம்... என் நண்பர் அவரின் மகளுக்கு கடவுச்சீட்டுபெறுவதற்காக ஊரிலேர்ந்து குழந்தையின் பிறப்பு சான்றிதள் வரவழைத்துமிகுந்த வேலைப்பளுக்கிடையே துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றுஇருக்கிறார்.

சென்ற வேகத்துலேயே எந்த வேலையும் ஆகாமல் திரும்பவந்துவிட்டார். காரணம் கேட்டதற்கு அந்த பிறப்புச்சான்றிதழ் முழு முதற்கொண்டு தேவையானவிபரங்கள் பூர்த்தி செய்தது செம்மொழியாம் தமிழிலேயே இருக்கிறதாம். அவ்வாறு இருந்தால் அதற்கான அஃபிடவிட்டி தரமாட்டாங்களாம்.

ஆங்கிலம்
அராபிக்
ஹிந்தி
மலையாளம்

மேற் குறிப்பிட்ட மொழிகளில் அல்லாது வேறு மொழியில் இருந்தால்ஒத்துக்கொள்ளப்ப்டமாட்டாதாம். இவ்வாறு நண்பர் கூறி ஆதங்கப்பட்டார்.

மற்ற மூன்றையும் விட்டுவிடுவோம், மலையாளம் செம்மொழியாய்அங்கீகரிக்கப்பட்ட மொழியா? இந்திய தூதரகம் என்பதற்கு பதில் கேரள தூதரகம்என்று அழைக்கும் அளவிற்கு மலையாளீகளின் ஆக்கிரமிப்பு இருக்கிறது என்பதுஉண்மை. பாஸ்போர்ட் அலுவலகம் தமிழ்நாட்டுலேதானே இருக்கிறது, தமிழ்நாட்டில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு தமிழில் தறும் சான்றிதள்புறக்கணிப்படுமா? இங்கு வேலை செய்பவர்களுக்கு தமிழ் தெரியும்தானே. தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய தூதரகத்துக்கு அரசாங்கம்உத்தரவிடவில்லையா. இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் இரண்டுமாதங்களுக்கு முன்னர்தான் தமிழில் பிறப்புச்சான்றிதழ் இருந்தால்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற இயற்றப்படாத சட்டம் அமுலாகிருக்கிறது. அதுவும் இரண்டு மாதம்கூட ஆகவில்லை செம்மொழி மாநாடு நடந்து.


என்னாலே இப்படி எழுததான் முடிகிறது, சிலது சரியாக நடவடிக்கை எடுக்கலாம், சிலது தனது ஆதங்கத்தை சொல்லலாம். இந்த பதிவு சரியான நபர்களிடம் சேர்ந்து அதற்கான தீர்வு கிடைத்தால் ஒட்டுமொத்த தமிழனுக்கும் பெருமை. நடக்குமா..???

பசங்க ஒரு கோப பார்வை..!

அபுஅஃப்ஸராகிய நான் இப்போது அப்துல்மாலிக் என்ற உண்மையான பெயருடன் நீண்ட நாட்களுக்குப்பிறகு வலைத்தளத்திலுள்ள நட்பு மலர்களைசந்திக்கவருகிறேன். காலச்சூழ்நிலை நம்மை எங்கெங்கோ கொண்டுசேர்த்துவிட்டது, வேலைப்பழு அதிகமாகி அதிகம் எழுத முடியாமல் போனது (தப்பிச்சோம்னுஇருந்தீங்களா?), இருந்தாலும் அவ்வப்போது எல்லா மலர்களைநுகர்ந்தும்முடிந்தால் சில பூக்களுக்கு தண்ணீர் ஊற்றியும் சென்றிருக்கிறேன். இனிமேல்நானும் பூக்கள் முளைக்க மீண்டும் விதை தூவ ஆரம்பிச்சாச்சு.

நான் பதிவெழுத வந்த போது பதிவெழுதிய எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள் இப்போவெல்லாம் ஏனோ சில பல காரணத்துக்காக ஒதுங்கியே இருக்கிறார்கள், அவர்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பது என் அவா

அமீரகத்தில் பள்ளி விடுமுறை ஆரம்பிச்சாச்சு, ஜூலை, ஆகஸ்ட் மாதம் இங்கேவிடுமுறை. இந்த இரண்டு மாதங்கள் மட்டும் அதிகமானோர் வெக்கேஷனுக்குதத்தமது நாடுகளுக்கு சென்றுவிடுவதால் ட்ராஃபிக் குறைவாகவே இருக்கும், பெரும்பாலான ஷாப்பிங்க் காம்ளெக்ஸில் கூட்டமும் குறைவாகவேகாணப்படும்.இந்த வருடம் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவேஇருக்கின்றன. இது போன்ற நேரத்தில் ஷார்ஜாவில் மின்சாரம் ஒரு நாளைக்குகுறைந்தது நான்கு முதல் ஆறு மணி நேரம் மணி நிறுத்திவிடுகிறார்கள். மின்சாரத்தேவை எவ்வளவு இன்றியமையாயது என்பது வளைகுடாநாடுகளில்குப்பைகொட்டுபவர்களுக்கு தான் தெரியும்.

பள்ளி விடுமுறையின் காரணமாக வீட்டில் இருக்கும் என் பையன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பாவம் இப்படி அடைத்து வைத்தால் என்னதான் செய்வாங்க. சும்மா இருக்கும்போது விளையாடுவது, கார்ட்டூன் பார்ப்பது, நினைத்ததை வரைவது இப்படி ஏதாவது வேலை செய்துக்கொண்டிருக்கும் என் மகனை ஒரு நாள் சாப்பிடாமல் அடம்புடிச்ச காரணத்தால் கொஞ்சம் ஓவராக(?) அடித்துவிட்டேன். அவ்வளவுதான் கடுப்பாகிப்போய் அவன் வரைந்த ஓவியத்தில் என்ன செய்திருக்கிறன் என்பதை பாருங்க.தெரியாதவர்கள் படத்தை பெரிதாக்கி பார்க்கவும்

அதோடு ஒரு பேப்பர் பென்சிலை எடுத்து தன்னை இவ்வாறு அடிச்சுட்டாங்களேஎன்ற ஆதங்கம் தாங்கமுடியாமல் கீழே உள்ளவாறு எழுதி என் கிட்டேபடிச்சுப்பார்க்க சொல்லி காட்டினார்.
சரியா தெரியாவிடில் படத்தை க்ளிக்கி படிக்கவும்

இது முன்னர் வரைந்த படம், அப்புறம் கிறுக்கி மேலே ஹேப்பி ஃபேமிலினுஎழுதிட்டு அடி வாங்கியது அதையே கிறுக்கி.....

இப்பொழுது முதல் வகுப்பு கிரேட்-1 படித்துக்கொண்டிருக்கிறார்

இப்போ உள்ள பசங்களுக்கு என்னா மாதிரியான கோபம் வருதுனு சொல்றதுக்கு இதைவிட ஒரு நல்ல உதாரணம் இல்லை. நாம சிறுவராக இறுந்த போது நம்பெற்றோர்களிடம் அடி வாங்கியது மாதிரி நினைத்து நம் பிள்ளைகளையும்அடித்தால் பின் விளைவை நிறைய சந்திக்க நேரிடும். காலம் மாறிப்போச்சு.... .


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே