"வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?"
--நன்றி நிலா ரசிகன்..
இந்த வரிகள் என்னை அதிகம் பாதித்தது உண்மை, உறவுகளை விட நட்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவன் நான்.
நட்பால் உலகம் அறிகிறான்
நட்பால் வாழ்கையை படிக்கிறான்
நட்பால் தற்பெருமையை அழிக்கிறான்
நட்பால் உதவும் மனப்பான்மை பெருகிறான்
நட்பால் எல்லாமே கிடைக்கிறது.....
அந்த நட்புகளை பிரிந்து இன்று என்னைபோல் எத்தனையோ நண்பர்கள் தவிப்பார்கள்.. இதற்கு மனது அதே புதிய நட்பை நாடும் இவற்றையெல்லாம் ஓரளவேணும் குறைப்பதில் இந்தபதிவுகளும், பதிவர்களும் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. இந்த நட்பும் இணையம் இருக்கும் வரைக்கும்தான்.. கணினி ஆஃப் ஆனாலோ, இணைய இணைப்பு துண்டிக்கபட்டாலோ நம் நட்பும் அத்தோடு லாகாஃப் ஆகிவிடும்.
இருந்தாலும் மனது அதிகமாக இணையப்பக்கம் நாடுகிறது நண்பர்களின் பதிவையும், ஆன்லைன் சேட்டிலே பேசுவதற்காகவும்.
என்னை கட்டினியலா இல்லை இந்த கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டியலா * இது மனைவி
என்னை பெத்தியலா இல்லை இந்த கம்ப்யூட்டரை பெத்தியலா * இது என் பையன்
என்னாடா பேசாமல் உம் உம் உம் என்று சொல்லிக்கிட்டிருக்கே * இது தெரிந்தவர்கள், தொலைப்பேசியில் பேசும்போது கவனம் முழுது பதிவில் இருப்பதால்
அசைன்மெண்ட் 10 நிமிஷத்துலே கொடுக்கனும், அதை விட்டுவிட்டு ஏதோ செய்துக்கிட்டிருக்கே (அலுவலகத்தில் கணினி திரையிலே ஆங்கிலத்தை தவிர தமிழ் மொழியை பார்த்தவுடன் நினைத்துவிடுவாங்க சொந்தக்கதை பார்க்கிறானு)* இது மேனேஜர்
எல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டு எருமை மாட்டுமேலே மழை பெய்த கதையாக மீண்டும் மீண்டும் பதிவுகளை படித்தும் பின்னூட்டமிட்டும் (இதெல்லாம் வெட்டிவேலை என்று தெரிந்தும்) நட்பு வட்டத்திற்கு நம்மை அடைத்துக்கொள்வதே ஒரு சுகம்தான்.
அந்த வகையில் பிளாக்கர்ஸ் நண்பனாக எனக்கு விருதை தந்த நண்பர் ஸ்டார்ஜனுக்கு என் நன்றி....
இதையே நான் இந்த பிளாக் உலகில் நல்ல நண்பர்கள் நிறைய கிடைத்திருக்கிறார்கள், அவர்களின் நட்பை நிலைநாட்டிடும் பொருட்டு (இல்லாட்டியும் அவர்கள் நம் நண்பர்கள்தான்) இந்த அவார்டை கொடுத்து நட்பூக்கள் மலர்ந்து வாசனை வீசட்டும் உங்கள் பிளாக்கிலும்..
1. ஆதவா... நல்ல நண்பன், என் பதிவுகளை அதிகம் ரசித்து ஒரே பின்னூட்டத்தில் அத்தனை புகழ் பாடுவார்
2. அ.மு. செய்யது... நல்ல நண்பர், பதிவுகளை பிரிச்சி மேஞ்சிடுவார்.
3. தமிழரசி... கவிதைகளின் காதலி இவர், நட்புக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்
4. ராகவன்... நைஜீரியாவாக இருந்தாலும் பாசத்தால் என் பக்கத்தில் எப்போதும் இருப்பவர்
5. கலையரசன்... எப்பவும் தன்னை சுற்றியுள்ளவரை கல கலனு வைத்திருப்பவர்
6. பாலா... இவர் கப்பலின் நாயகன், கடலின் அதிசியம் போலவே இவர் கவிதைகளும் புதிராகவே இருக்கும்.
7. ராஜேஸ்வரி... எனக்கு சிறந்த பிளாக் என்று சொல்லி பட்டாம்பூச்சி விருது தந்தவர், என் பதிவுகளை ரசித்து திருத்தவும் செய்பவர்
8. காயத்திரி... கவிதைகளிலே பேசுபவர், கும்மியில் தலைசிறந்தவர்
9. வால்பயன்.. பெயரில் உள்ளது போலவே கலாய்ப்பதிலும் தலைசிறந்தவர்...
10. நிலாரசிகன்.. இவர் கவிதைகளில் கவரப்பட்டேன்...
அவசரமான இந்த உலகத்தில் நட்புகளை பரிமாறிக்கொள்ளும் இந்த புனித தினத்தில் இந்த விருதுகளை கொடுப்பதில் பெருமைகொள்கிறேன்
27 கருத்துசொல்ல:
நன்றி நண்பா! என்னை ஞாபகம் வைத்து விருது குடுத்தமைக்கு...
அதுவும் இந்த நாளில் கிடைப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி!!
வாழ்க உனது ஃபிளாக்! வளர்க உனது புகழ்!!
அபு,கொடுப்பதிலும் வாங்குவதிலும் ஒரு அலாதிச் சந்தோஷம்தான்.
வாங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்களிடமிருந்து வாங்கியவர்களுக்குப் பாராட்டுக்கள்
நட்பை அழகா சொல்லியிருக்கீங்க
விருது கிடைத்த உங்களுக்கு
உங்களிடம் பெற்றவர்களுக்கும்
வாழ்த்துகள்.
நட்பின் பரிசுக்கு நன்றி !!! மிக்க மகிழ்ச்சி !!
நானும் நிலாரசிகனின் கவிதைகளுக்கு ரசிகன்.வலைதளத்துக்கு வருவதற்கு முன்பே.
நட்புகளுக்கு வாழ்த்துக்கள்
நட்பின் பரிசுக்கு நன்றி !!! மிக்க மகிழ்ச்சி !!
வாழ்த்துக்கள் அபு அண்ணா
வாழ்த்துக்கள் உங்கள் வலைத்தள நண்பர்களுக்கும்
நான் காசு கொடுத்த விருது வாங்குறத நல்லா புரிஞ்சி கிட்டு இன்னமா அவார்டு குடுக்குராங்கையா
கொஞ்சம் அவசர பட்டுட்டமோ ??????
பொருளாதார நிலைமை உலகத்தைப்போலவே என்னையும் கொஞ்சம் அதிகமாகவே பாதிச்சிடுச்சு
கொஞ்சம் பார்த்து ரேட்டு பிக்ஸ் பண்ணுங்க அபு
நண்பரே!!
வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி நண்பரே!
உங்களுக்கும் எனது அட்வான்ஸ் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
வாழ்க வளர்க.....இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....
vazththukkal anaivarukkum
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
அபு அஃப்ஸ்ர் வாழ்த்துக்கள்
விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் நன்பா & நன்பர்கள் அனைவருக்கும். விருதோட சேர்த்து விருந்தும் போட்டால் இன்னும் சுவையா இருக்கும், என்ன செய்ய யாரும் முன் வரமாட்டேங்கிறாங்களே!
விருது கொடுத்த உங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....
நட்பு பத்தி சூப்பரா சொல்லி இருக்கே மச்சான். விருது கொடுத்த உனக்கும், உன்னிடமிருந்து விருது பெற்ற அணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post.html
vazhlthukkal anai varum.
nanbarkal thina vazhthukkal
மச்சான் கலை வர வர கலக்குறான் சரி என்ன நம்ம பெயர காணோம் அவ் ;) சும்மா லோல் உங்க மனசுல இருந்தா போதும்
நட்பை அழகா சொல்லியிருக்கீங்க
உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே
விருது
வாங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் <->
உங்களிடமிருந்து வாங்கியவர்களுக்கும்.
நட்பை அழகா சொல்லியிருக்கீங்க
அபுவின் கையால் விருது மிகவும் சந்தோஷம்,,, ஆனால் இது அளித்த போது நான் இல்லை அதான் தாமதம் நன்றிப்பா நட்புக்கு பரிசாய் உங்கள் நினைவாய் இந்த விருது...
நட்புக்கு நட்பால் கிடைக்கும் விருது சிறந்தது வாழ்த்துக்கள் அனைவருக்கும்..
Post a Comment