அமைதியான, மதக்கலவரங்கலில்லா, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சகோதரத்துடன் (அவர்கள் யாராக இருப்பினும் சரியே; இந்தியனாக இருந்தால் மட்டும் போதும்) இறுதியில் நாம் உலகைவிட்டு செல்லும் பொழுது எதை எடுத்துச் செல்லப்போகிறோம் என்ற உயர்ந்த மனப்பான்மையுடன் வாழக்கூடிய, தீண்டாமை என்னும் கொடுந்தீயை அழித்து; மாசு படிந்துள்ள இந்த மனித உள்ளங்களில் உள்ள தூசுக்களை சுத்தம் செய்து, பார்வைக்குறைவான நம் அகக்கண்களுக்கு, இறைவன் நமக்களித்த அருட்கொடையாம் பகுத்தறிவு என்னும் கண்ணாடி அணிந்து தெளிவான உலகை காண புறப்படுவோம் ஓரணியில் ஆங்கிலேய ஏகாதிபத்யத்திடமிருந்து தன் குருதிகளை விலையாகக் கொடுத்து நம் முன்னோர்கள் பெற்றுத்தந்த இவ்விலை மதிப்பில்லா சுதந்திரம் என்னும் பொக்கிஷத்தை வானில் வட்டமிடும் கழுகுகளிடமிருந்து தன் பிஞ்சு குஞ்சுகளை தன் மிருதுவான இறக்கைகளுக்குள் பாது காக்கும் கோழிகளைப்போல் நாம் நம் இந்திய நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்போம்; சபதமேற்போம் இந்த பொன்னான தருனத்தில் உலகில் நாம் எந்த மூளையில் இருந்தாலும் சரியே. வாழ்க இந்தியா; வளர்க அதன் மைந்தர்கள்.
இந்திய சுதந்திரன தின கொண்டாட்டங்கள் கலைகட்டிருக்கும் இந்தியாவின் முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தை இங்கே காணலாம்.
சுதந்திரம் கொடுத்த ஆங்கிலேயர்களுடன் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு
அணிவகுப்பை பார்வையிடுவதற்காக சாலையின் இருபுறங்களிலும் குவிந்த மக்கள்
எந்தவித தீவிரவாத மிரட்டலும் இன்றி பாதுகாப்பு வளையமில்லாத ஒரு அணிவகுப்பு படையினர்
மெய்சிலிர்க்க வைக்கிறதல்லவா, மற்றவர்களும் கண்டுகளிக்க ஓட்டுப்போடுங்கள்