எப்போதும் பார்த்துக்கொண்டிருந்து
எப்போதாவது நினைப்பதை விட
எப்போதும் நினைத்துக்கொண்டு
எப்போதாவது பார்ப்பதில்தான்
எப்போதுமே காதலின் ஆழம் தெரியும்...!
தனிமை...
இதுதாங்க வழ்க்கையிலே மிகப்பெரிய நோய்களெல்லாம் வருவதற்கு காரணம், இது சில பேருக்கு ரொம்ப பிடிக்கும், பல பேருக்கு இதுதான் முதல் எதிரி. நான் அதுலே இரண்டாவது ரகத்தை சேர்ந்தவன். நீங்க எப்படினு நான் கேட்கமாட்டேன், அனுபவிக்கிறவனுக்குதான் அதனோட வலியும், சுகமும் தெரியும்.
"நான் யாரைப் பார்க்கப் போனாலும்
அவர் தனிமையில் இருந்துவிடக்கூடாதே
என்கிற பயம் எனக்கு
தனிமை கலைக்கப்படுகிறபோது ஏற்படும் இழப்புகளை
நான் அறிவேன்"
(நன்றி: தபூசங்கர்)
தனிமையிலே இனிமைக்கான முடியுமா..?
முடியும்... முடியாது என்ற இருவேறு கருத்துக்கள் கண்ணதாசன் காலத்திலிருந்தே இருந்துக்கொண்டுதானிருக்கிறது. இப்போது நமக்கு அதுவல்ல பிரச்சினை...
பெற்றோரின் அரவனைப்பிலிருந்து பிரிந்து (பிரிவு கூட ஒரு வகைதனிமைதான்) படிக்க செல்கிறது (முதன்முதலில் என் குழந்தையை பள்ளியில் விட்டுவரும்போது குழந்தையும், தாயும் அழுதது இன்னும் என் கண்முன்), நண்பர்கள் வட்டம் பெருகியவுடன் தனிமை காணாமல் போகின்றது.
நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது... அதைவிட மகிழ்ச்சியான ஒரு சூழல் எப்போதுமே இருக்காதுங்க..இதனால் பசியை மறந்தும், இருக்கும் இடம் மறந்தும், வெயில் உச்சி மண்டையை பிளந்தும் உணர்வற்று இருக்கும்போது அடுத்தவர் நினைவுப்படுத்தி ஓஹ்.. என்ற நினைப்புடன் கலைந்து சென்ற காலமும் உண்டு, அப்போதெல்லாம் முக்கியமான தேர்வையும் மிஸ் பண்ணிய சம்பவம் நடந்திருக்கிறது. வேலைப்பழுவிலும், குடும்ப சூழ்நிலையாலும் ஒவ்வொருதரும் பார்ப்பதற்கே அரியதாக இருக்கும்போது பழைய நினைவுகளின் ஏக்கத்தால் நம்மை நாமாகவே தனிமைப்படுத்தப்படுகிறோம்
காதலுக்காகவும்,காதலிக்காகவும், திருமணத்திற்காகவும் காத்திருக்கும்போதும், அதற்குப்பிறகு முதல் பிரிவிலும் தனிமையின் வலி அதிகம்..
சூரியன் தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை கோல்கள் என்று
நிலவு தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை விண்மீன்கள் என்று...
பூக்கள் தனித்தில்லையா என்றாய்
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை வண்டுகள் என்று...
என்னைவிட அதிகமாக என்னை காதலிக்கும்
உனக்கும் தெரியும் தனிமையின் வலி
யார் சொன்னது நான் தனித்திருக்கிறேனென்று
நீ கொடுத்த முத்தத்துடன் கலந்த ஸ்பரிசம் என்னுடன்...
தனித்திருக்கும்போது 'தவம்' செய்கிறேன்
பிணைப்பின் 'வரம்' பெறுவதற்காக...